சர்ச்சை பேச்சு... மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மீது போலீசில் புகார்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, 'இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர் உள்பட அனைவரும் ராமரின் பிள்ளைகள். இந்த சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை' எனப் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.

சாத்வி மன்னிப்பு கேட்ட போதும், தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். சாத்வி நிரஞ்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Complaint filed against Sadhvi Niranjan for use of abusive language in public rally
இந்நிலையில், மேற்கு டெல்லியில் வசித்து வரும் ராஜீவ் குமார் போலா என்ற வக்கீல், திலக் நகர் போலீஸ் நிலையத்தில் சாத்வி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘அரசியல்வாதிகள் அவதூறாக பேசுவது அதிகரித்து வருகிறது. இது, மக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது. எனவே, அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது இ.பி.கோ. 153(ஏ,பி) மற்றும் 295 (எ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இந்த புகார், வழக்கு பதிவு செய்ய ஏற்றதா? என்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+