லோக்சபா தேர்தலில் வெல்வோம்! பொருளாதாரத்தை மீட்போம்: ராஜ்நாத்சிங் நம்பிக்கை!
மும்பை: லோக்சபா தேர்தலில் வென்று பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், 2014ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 272-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

272க்கும் அதிகமான இடங்களை எங்களுக்குக் கொடுங்கள். இந்தியாவின் பெருமையை உலகளவில் மீட்டெடுக்கும் வகையில் பொருளாதார கொள்கைகளுடன் ஆட்சி அமைப்போம். நாட்டின் பொருளாதாரத்தை நாங்கள் மீட்டெடுப்போம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறும் என்றார்.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளரை அறிவித்ததில் அத்வானியின் அதிருப்தி பற்றிய கேள்விக்கு எந்த பதிலும் ராஜ்நாத்சிங் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications