பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்க- தேர்தல் ஆணையத்திடம் காங். பரபரப்பு மனு!
டெல்லி: தேர்தல் செலவு கணக்கைக் காட்டாத பிரதமர் நரேந்திர மோடியை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சட்டபிரிவு செயலாளர் கே.சி.மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ராஜேஷ்மிஸ்ரா ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒரு புகார் மனு அளித்துள்ளனர்.

அதில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் தேர்தல் செலவுக்கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
வாரணாசி தொகுதியில் தேர்தல் அலுவலகத்திற்கு 2 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் அதனையும் தேர்தல் செலவுக் கணக்கில் நரேந்திர மோடி தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்படி முறையாக தேர்தல் செலவுக்கணக்கை காட்டாததால் மோடியை தகுதி நீக்க செய்ய வேண்டும் என்றும் பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications