மகராஷ்டிரா: சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்- இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி?
மும்பை: மகாராஷ்டிரா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்த போதும் புதிய முயற்சியாக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும், பாஜக - சிவசேனைக் கூட்டணியும் முறிந்ததால் நான்கு கட்சிகளும் தனித்தனியே களம்கண்டன. மொத்தம் 288 சட்டசபைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 123 இடங்களைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தரும் என்று அக்கட்சித் தலைவர் சரத்பவார் கூறியிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ். நெருக்கடி
ஆனால் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நெருக்கடி கொடுத்து வருகிறது.

புதிய கூட்டணி அரசு?
இந்த நிலையில் புதிய பரபரப்பாக காங்கிரஸ்- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் பவார் தகவல்
தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் துணை தலைவர் அஜித் பதவார் இதுபற்றி கூறுகையில், காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதிய யோசனையை தெரிவித்தார். சிவசேனாவை சேர்ந்து கொண்டு நாம் ஆட்சி அமைக்கலாம் என்று கூறினார். மூன்று கட்சிகளும் கூட்டு சேர்ந்தால் ஆட்சியமைக்க போதிய பலம் கிடைத்து விடுகிறது. ஆனால் இந்த திட்டத்தின்படி நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது என்று அவரிடம் நான் தெரிவித்து விட்டேன் என்றார்.

சாத்தியமா?
சிவசேனா 63, காங்கிரஸ் 42, தேசியவாத காங்கிரஸ் 41 ஆகிய இடங்களில் வெற்றி பெற்று உள்ளன. இந்த மூன்று கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை ஆட்சியமைக்க போதுமான அளவுக்கு 146 உள்ளது. 288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தாலே ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications