மேகாலயாவில் நள்ளிரவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்
ஷில்லாங்: மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள காங்கிரஸ் நள்ளிரவில் ஆளுநர் கங்கா பிரசாத்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
மேகாலயா சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 21 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸை எதிர்த்த தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும் மாநில கட்சிகள் கணிசமான இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

மாநில கட்சிகளுடன் பேச்சு
பாஜக 2 இடங்களில் வென்றுள்ளது. மேகாலயாவில் பெரும்பான்மைக்கு தேவை 31 எம்.எல்.ஏக்கள். இது தொடர்பாக மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாஜகவும் தீவிரம்
அதேநேரத்தில் பாஜகவோ தேசிய மக்கள் கட்சி தலைமையில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைக்க முயற்சிக்கிறது. கோவாவில் பெரும்பான்மையே இல்லாத நிலையில் திடீரென பாஜக ஆட்சி அமைத்தது.

ஆளுநருடன் சந்திப்பு
அதேபோல மேகாலயாவிலும் பாஜக முயற்சிக்கக் கூடும் என்பதால் காங்கிரஸ் உஷாராகவே இருந்து வந்தது. நள்ளிரவில் ஆளுநர் கங்கா பிரசாத்தை சந்தித்து தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

சட்டசபை தலைவர் தேர்வு
இதையடுத்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.












Click it and Unblock the Notifications