தேர்தலுக்கு பிந்தைய நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க காங்கிரஸ் மையக்குழு கூடுகிறது
டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய வியூகம் குறித்து விவாதிக்க அக்கட்சியின் மையக்குழு கூட்டம் கட்சி தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய வியூகம் குறித்து விவாதிப்பதற்காக, அக்கட்சியின் மையக்குழு கூட்டம் கட்சி தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று இரவு நடைபெறுகிறது.
பிரதமர் மன்மோகன்சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமருக்கு பிரிவு உபச்சார விழா நடத்துவது, வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி எந்த மாதிரியான நிலைப்பாடு எடுக்கலாம் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மூன்றாவது அணிக்கு ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பது பற்றியும் இதில் விவாதிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications