For Daily Alerts
Just In
அதெல்லாம் ஆம் ஆத்மியை ஆதரிக்க மாட்டோம்.. காங்கிரஸ் அஜய் மக்கான் விளக்கம்
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான ஷீலா தீட்சித், ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் மீண்டும் ஆதரவு அளிப்பதை மறுப்பதற்கில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான், ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கும் கேள்விக்கே இடமில்லை.
ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் தொடர்ந்து ஆதரித்திருந்தால், டெல்லியில் தற்போது தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார்.
முன்பு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன்தான் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் பின்னர் நடந்த சொதப்பல்களால் இப்போது காங்கிரஸ் தனது நிலையை மாற்றியுள்ளது.
Comments
English summary
Congress leader Ajay Maken, who was Tuesday named the party campaign committee chief for the Delhi assembly elections, said his party was the only “trusted and tested” option against the AAP, which was “trusted” but not “tested”.
Story first published: Wednesday, January 14, 2015, 17:43 [IST]