காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜம்ப் செய்தால் என்ன செய்வது.. நள்ளிரவு சித்து, சன்னி நடத்திய பரபரப்பு ஆலோசனை
அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில் தங்கள் எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தில் சிக்கிவிடுவார்களோ என்ற அச்சம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. சுமார் 18 நாட்கள் காத்திருப்புக்கு பிறகு இன்று தேர்தல் முடிவுகளுக்காக கட்சிகள் காத்திருக்கின்றன.
இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தள், பஞ்சாப் லோக் காங்கிரஸ் (அமரீந்தர் சிங்) உள்ளிட்டவை போட்டியிட்டன. இதன் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சியே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம் ஆத்மி மகிழ்ச்சியில் உள்ளது. பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்து ஆம் ஆத்மி தேர்தலை சந்தித்தது.

மாற்றத்திற்கான தேர்தல்
இந்த முறை மாற்றத்திற்கான தேர்தல் என ஆம் ஆத்மி கூறி வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த நேரத்தில் நேற்றைய தினம் சண்டிகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஹரீஷ் சவுத்ரி, அஜய் மக்கான், சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சி தோல்வி
அதில் ஒரு வேளை காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சி அமைக்க தவறும் பட்சத்தில் குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை ராஜஸ்தான் மற்றும் மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் நேற்று முன் தினம் இரவு அமரீந்தரின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில், பல காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக அமரீந்தர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

குதிரை பேரம்
இதனால் குதிரை பேரத்திற்கு வழி வகுத்து விடுமோ என காங்கிரஸ் அச்சம் கொள்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் முட்டாள்தனம் என சிரோமணி அகாலி தள் கூறுகிறது. இவையெல்லாம் தடை செய்யப்பட வேண்டும். ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி மீடியாக்கள் வாயிலாக ஆதாயம் பெற நினைக்கிறார்கள். எனவே அந்த நம்பிக்கையை இந்த தேர்தல் உடைக்கும் என அகாலி தளம் கூறுகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications