Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜம்ப் செய்தால் என்ன செய்வது.. நள்ளிரவு சித்து, சன்னி நடத்திய பரபரப்பு ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில் தங்கள் எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தில் சிக்கிவிடுவார்களோ என்ற அச்சம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. சுமார் 18 நாட்கள் காத்திருப்புக்கு பிறகு இன்று தேர்தல் முடிவுகளுக்காக கட்சிகள் காத்திருக்கின்றன.

இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தள், பஞ்சாப் லோக் காங்கிரஸ் (அமரீந்தர் சிங்) உள்ளிட்டவை போட்டியிட்டன. இதன் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சியே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம் ஆத்மி மகிழ்ச்சியில் உள்ளது. பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்து ஆம் ஆத்மி தேர்தலை சந்தித்தது.

மாற்றத்திற்கான தேர்தல்

மாற்றத்திற்கான தேர்தல்

இந்த முறை மாற்றத்திற்கான தேர்தல் என ஆம் ஆத்மி கூறி வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த நேரத்தில் நேற்றைய தினம் சண்டிகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஹரீஷ் சவுத்ரி, அஜய் மக்கான், சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சி தோல்வி

காங்கிரஸ் கட்சி தோல்வி

அதில் ஒரு வேளை காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சி அமைக்க தவறும் பட்சத்தில் குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை ராஜஸ்தான் மற்றும் மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் நேற்று முன் தினம் இரவு அமரீந்தரின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில், பல காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக அமரீந்தர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

குதிரை பேரம்

குதிரை பேரம்

இதனால் குதிரை பேரத்திற்கு வழி வகுத்து விடுமோ என காங்கிரஸ் அச்சம் கொள்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் முட்டாள்தனம் என சிரோமணி அகாலி தள் கூறுகிறது. இவையெல்லாம் தடை செய்யப்பட வேண்டும். ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி மீடியாக்கள் வாயிலாக ஆதாயம் பெற நினைக்கிறார்கள். எனவே அந்த நம்பிக்கையை இந்த தேர்தல் உடைக்கும் என அகாலி தளம் கூறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+