கோவா, மேகாலயா மாநிலங்களில் பாஜக பயன்படுத்திய ஃபார்முலாவை கர்நாடகாவில் கையிலெடுத்தது காங்கிரஸ்!
மணிப்பூர், கோவா, மேகாலயா மாநிலங்களில் பாஜக பயன்படுத்திய ஃபார்முலாவை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கையிலெடுத்துள்ளது.
Recommended Video

பெங்களூரு: மணிப்பூர், கோவா மற்றும் மேகாலயாவில் பாஜக பயன்படுத்திய ஃபார்முலாவை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கையிலெடுத்துள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்கும் என கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஜேடிஎஸ் தலைமையில் ஆட்சியமைகிறது. கர்நாடக தேர்தல் முடிவில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்தது.
ஆனால் திடீரென எதிர்பாராத விதமாக பாஜக முன்னிலை பெற்ற இடங்கள் கணிசமாக குறைந்தது. சற்றுமுன் நிலவரப்படி பாஜக 94 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

குமாரசாமி முதல்வர்
இந்நிலையில் பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் ஜேடிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது. தேவகவுடாவின் மகன் குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளது.

அதிக இடங்களில் வெற்றி
இன்று மாலை காங்கிரஸ் ஜேடிஎஸ் கட்சிகள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலைக் காட்டிலம் பாஜக இம்முறை அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

காங்கிரஸ் அதிரடி
ஆனால் அதனை அனுபவிக்க முடியாதபடி, பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தட்டிப்பறித்த பாஜக
கடந்த ஆண்டு மணிப்பூர், மேகாலயா மற்றும் கோவா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. ஆனால் அவர்களிடம் இருந்து ஆட்சியை தட்டிப் பறித்தது பாஜக.

பாஜக ஃபார்முலா
இந்நிலையில் அதே ஃபார்முலாவை கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமை கையிலெடுத்துள்ளது. இதனால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் அதிரடி திருப்பங்களுடன் அனல் பறக்கிறது.












Click it and Unblock the Notifications