அரசியலில் நீடிப்பதே பெரிய சவாலா இருக்கு.. காங். குறித்து ஜெய்ராம் ரமேஷ் ஷாக் பேச்சு!
காங்கிரஸ் கட்சியின் இருப்புக்கே நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சி: காங்கிரஸ் கட்சி அரசியலில் நீடிப்பது என்பதே சவாலானதாக மாறிவிட்டது... மூத்த தலைவர்கள் பலரும் ஆட்சியில் இருப்பதாக கெத்து காட்டும் போக்கையும் கைவிட வேண்டும் என பொளந்து கட்டியுள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
நாடு முழுவதும் பாஜகவின் ஆள்பிடி வலையில் சிக்கி காங்கிரஸ் சிதறிப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் காங்கிரஸின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி வருகிறது.
இது தொடர்பாக கொச்சியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டி:

மிதப்பில் தலைவர்கள்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்னமும் ஆட்சியில் இருப்பதாக மிதப்பில் இருக்கின்றனர். இந்த அணுகுமுறையை முதலில் இவர்கள் கைவிட வேண்டும்.

தேவையற்றவை
காங்கிரஸ் கட்சியின் எண்ணங்கள், செயல்பாடுகள், எதை முன்னிறுத்துவது, எப்படி பேசுவது என அனைத்திலுமே மாற்றம் தேவை. மக்கள் இப்போது விரும்புவது புதிய ஒரு காங்கிரஸைத்தான். மக்களுக்கு பழைய கோஷங்கள், வியூகங்கள் என்பது தேவையில்லாத ஒன்றகிவிட்டது.

தேர்தல் தோல்விகள்
காங்கிரஸ் கட்சியின் முன்பு மிகப் பெரும் சவால் இருக்கிறது. 1996 முதல் 2004-ம் ஆண்டு வரை காங்கிரஸ் நெருக்கடியை எதிர்கொண்டது. 1977 தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் நெருக்கடி ஏற்பட்டது. அது வேறான நிலைமை.

இருப்புக்கே சவால்
இப்போது காங்கிரஸ் கட்சியின் இருப்புக்கே நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். இது தேர்தல் தோல்வியின் மூலம் வரக்கூடிய ஒரு நெருக்கடியே அல்ல. உண்மையில் காங்கிரஸ் கட்சி கடும் சவாலையும் நெருக்கடியையும் எதிர் கொண்டிருக்கிறது.

அதிருப்தி அலை கனவு
எம்.எல்.ஏக்களை வலைவீசி பிடிக்கும் பாஜக வேட்டையில் இருந்து தப்பிக்க குஜராத் எம்.எல்.ஏக்களை கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தது சரியானதுதான். மோடி அரசுக்கு எதிரான ஒரு அதிருப்தி அலை வரும் காங்கிரஸ் நினைத்து காத்திருந்தால் நிச்சயம் அது தவறானது.

வித்தியாசம் தேவை
மோடியும் அமித்ஷாவும் வித்தியாசமாக சிந்திக்கின்றனர்; செயல்படுகின்றனர். நாமும் நமது அணுகுமுறையில் மென்மைப் போக்கை கடைபிடிக்காவிட்டால் காங்கிரஸ் தகுதியற்றதாகிவிடும் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என விரும்புகிறோம். 2018 தேர்தலையாவது ராகுல் காந்தி தலைமையில் எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications