தாமரை சின்னத்தை காண்பித்த விவகாரம்.. மோடியை கைது செய்ய காங், ஐ.ஜனதா தளம் வலியுறுத்தல்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் வாக்களித்த பின்னர் கையில் தாமரை சின்னத்துடன் போட்டோ எடுத்துக் கொண்ட நரேந்திர மோடியை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் புதன்கிழமையன்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாக்களித்தார். அவர் வாக்களித்த பின்னர் தமது கையில் தாமரை சின்னத்தை இணைத்துக் கொண்டு போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதே போல தாமரை சின்னத்தை ஏந்தியபடியே செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்தார்.

மோடியின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் மோடி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் மோடியை கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது காங்கிரஸ். அக்கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் கே.சி. மிட்டல் கூறுகையில், தேர்தல் ஆணையம் மோடி மீதான புகாரை ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்றார்.
இதேபோல் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தை மீறிய நரேந்திர மோடியை உடனே கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளமும் கோரியுள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் சம்பத்துக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச்செயலர் தியாகி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்திய ஜனநாயக வரலாற்றில் இதுவரை ஒரு பிரதமர் வேட்பாளர் என்பவர் இப்படி பகிரங்கமாக தேர்தல் விதிமுறைகளை மீறியது கிடையாது. ஆனால் அவர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மோடி போட்டியிடும் இரு தொகுதிகளிலும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவரை உடனே கைது செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தேர்தல் நடைமுறைகளை மதவாதமாக்குவோருக்கு தக்க பாடம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications