Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது இயற்கையான வெள்ளமே இல்லை.. அப்படியே தமிழக எதிர்க்கட்சிகள் போலவே பேசும் கேரள காங்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இது இயற்கையான வெள்ளமே இல்லை. அணைகளை இடதுசாரிகள் அரசு முறையாக பராமரிக்காததே இந்த பேரிடருக்கு காரணம் என்றும் நீதி விசாரணைக்கு உத்தரவிடவும் எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.

கேரளத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் கடவுளின் தாய் வீடு என்று வர்ணிக்கப்படும் அந்த தேசமே நீரில் தத்தளித்தது. இதனால் 300-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின.

Congress in Kerala demands Judicial probe on devasvating floods

சுமார் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டதாக கேரள முதல்வர் அறிவித்தார். மேலும் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துவிட்டதால் ஏராளமான வெள்ள பெருக்கு ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இது இயற்கையான வெள்ளம் அல்ல என்றும் இது மனித தவறால் ஏற்பட்டது என்றும் எதிர்க்கட்சிகள் போர் கொடி உயர்த்தியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பே அணைகளில் உள்ள நீரை வெளியேற்றியிருந்தால் வெள்ளத்தை தவிர்த்திருக்க முடிந்திருக்கும்.

அணைகளை முறையாக பராமரிக்காததாலும் தவறான நிர்வாக திறமையாலும் இதுபோல் பேரழிவு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு விட்டது. கேரளாவில் உள்ள அணைகளை பராமரிக்கும் கேரளா மின்சார வாரியம் எந்த தவறும் நடக்கவில்லை என மறுத்துள்ளது.

எனவே இந்த வெள்ள விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சென்னிதலா கோரிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+