குஜராத்தில் மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை.. தேர்தல் ஆணையத்திடம் பாஜக விளக்கம்
வாக்குப்பதிவின் போது மோடி தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உள்ளது .
அகமதாபாத் : தேர்தல் நடக்கும்போது பேரணி போல் மோடி சென்றது குறித்து காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
குஜராத் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இதில் இன்று காலை அகமதாபாத் அருகே உள்ள ராணிப் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் பிரதமர் மோடி.

வாக்களித்த பின்னர், மை வைக்கப்பட்ட விரலை தூக்கி காட்டியபடியே சாலையில் நடந்து சென்றார். பின்னர் சாலையில் இருந்த காரில் ஏறிச் சென்றார் மோடி. இதனைப் பார்த்து அங்கு வாக்களிக்க வந்த மக்கள் மோடிக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.
மோடியின் பாதுகாப்பு வாகனங்கள், போலீஸாரின் வாகனங்களால் மோடியின் அந்த பயணம் பேரணி போல் இருந்ததாகவும், கை காட்டியபடியே சாலையில் நடந்து சென்றது பிரச்சாரம் போன்று காணப்பட்டதாகவும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் விதிமீறல் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், நேற்று ராகுல் காந்தியின் பேட்டியை ஒளிபரப்பியதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குத்தொடர அனுமதி அளித்த தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் காக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க அமைச்சர்கள் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்து உள்ளனர். மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் ஆகியோர் டெல்லி தேர்தல் அலுவலகம் வந்து உள்ளனர். மேலும் காங்கிரஸின் குற்றச்சாட்டை அவர்கள் மறுத்து உள்ளனர்.
வாக்குச்சாவடிக்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்தி விட வேண்டும் என்கிற விதியை பின்பற்றியதாகவும், ஓட்டு போட்டதன் அடையாளமாகவே கையை மோடி உயர்த்திக் காட்டியதாகவும் இதில் வேறு எந்த அர்த்தமும் இல்லை என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அகமதாபாத் தேர்தல் அதிகாரி விரிவான அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது . அறிக்கைக்கு பிறகு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது .
-
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு!









Click it and Unblock the Notifications