நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங். கட்சி தலைவராக வர வாய்ப்புண்டு: சொல்வது ப.சி.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் வர வாய்ப்பு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு ப.சிதம்பரம் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் தலைவர் சோனியாவும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் ஊடகங்கள் மற்றும் மக்கள் முன்னர் அதிகம் பேச வேண்டும். காங்கிரஸ் பற்றிய மதிப்பீடு குறைவானதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் உடனே விரைந்து செயல்பட வேண்டும்.

கருப்புப் பண விவகாரத்தில் நரேந்திர மோடி அரசு ஒன்றுமே செய்துவிட வில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் சோனியா காந்திதான் மிக முக்கியமான தலைவர்.
அதே நேரத்தில் எதிர்காலத்தில் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications