For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்.. கோவிந்த் சிங் நியமனம்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் கட்சித் தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். இவருடன் அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளனர். சச்சினுக்கு பதிலாக கோவிந்த் சிங் தோட்டாஸ்ரா என்பவர் ராஜஸ்தான் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் கட்சித் தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். இவருடன் அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளனர். சச்சினுக்கு பதிலாக கோவிந்த் சிங் தோட்டாஸ்ரா என்பவர் ராஜஸ்தான் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Congress may take disciplinary action against Sachin Pilot and his supporters

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூருக்கு வெளியே இருக்கும் ஃ பேர்மான்ட் ஓட்டலில் இன்று இரண்டாவது முறையாக நடந்த ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றக் கூட்டத்திலும் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும், கட்சியிலும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பனிப் போர் தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்குமா? நிலைக்காதா? என்ற அச்சத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. தனக்கு 30 எம்.எல்.ஏ.களின் ஆதரவு இருப்பதாக சச்சின் கூறி வருகிறார். ஆனால், டெல்லியில் மானேசர் ஓட்டலில் முகாமிட்டு இருக்கும் சச்சினுடன் வெறும் 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இன்று ஜெய்ப்பூரில் நடந்த இரண்டாவது சட்டமன்றக் கூட்டத்திலும் இரண்டும் அமைச்சர்களுடன் மொத்தம் 18 பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும், எம்.எல்.ஏ.க்களை கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு தன் பக்கம் இழுத்த குற்றத்திற்காக சச்சின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருந்தது. மேலும், காங்கிரசிலிருந்து சச்சின் பைலட்டை நீக்குவதற்கு எம்.எல்.ஏ.கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது. நேற்று சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம், அகமது பட்டேல் ஆகியோர் பேசியபோதும் சச்சின் மடியவில்லை.

தன்மானம் முக்கியம்.. மன்னிப்பு கேளுங்கள்.. காங்.மேலிடத்தை சீண்டிய சச்சினின் கோரிக்கை.. நடந்தது என்ன?தன்மானம் முக்கியம்.. மன்னிப்பு கேளுங்கள்.. காங்.மேலிடத்தை சீண்டிய சச்சினின் கோரிக்கை.. நடந்தது என்ன?

இதனால், இன்று இருதரப்புக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது வரைக்கும் சச்சின் பைலட்டுக்கு 15 முதல் 17 எம்.எல்.ஏ.களின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று சட்டமன்றக் கூட்டம் துவங்குவதற்கு முன்பு, சச்சின் ஆதரவாளர்கள் ட்வீட் செய்து இருந்தனர். அதில், ''காங்கிரஸில் இருப்பது அசோக் கெலாட்டிற்கு அடிமையாக இருப்பதற்கு சமம்'' என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Congress may take disciplinary action against Sachin Pilot and his supporters
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X