"இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்....." மூத்த காங். தலைவர் திக்விஜய்சிங் கருத்தால் புது சர்ச்சை
டெல்லி: ஜம்மு காஷ்மீரை இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது.
காஷ்மீரில் கடந்த மாதம் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்கு ஒரு மாதத்துக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இதுவரை 66 பேர் பலியாகி உள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து தலையிட்டு வருகிறது.
#WATCH: Digvijaya Singh addresses J&K as India occupied Kashmir, later clarifies that it's integral part of Indiahttps://t.co/6XC28a2q5T
— ANI (@ANI_news) August 18, 2016
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங், காஷ்மீரை இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையாகிஉள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய்சிங், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பிரதமர் மோடி கவலையடைந்து உள்ளார். அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார், நன்றி கூறுகிறார். பலுசிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.
ஆனால் இந்தியாவில் உள்ள காஷ்மீரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் தயாராக இல்லை. இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நாம் நம்பிக்கையை உருவாக்கவேண்டும் என்றால் பேச்சுவார்த்தையின் வாயிலாகவே அது சாத்தியமாகும் என்றார்.
பின்னர் திக்விஜய் சிங்கிடம் அவருடைய "இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்" கருத்து குறித்து செய்தியார்கள் கேள்விகளை எழுப்பிய போது, "அப்படி இல்லை, காஷ்மீர் இந்தியாவில் உள்ளது என்பதையே குறிப்பிட வந்தேன்... காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்றார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதிதான்... பிரச்சனை என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் இருக்கிறது என்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications