மோடி அரசின் கொள்கைகளை கண்காணிக்க நால்வர் குழுவை அமைத்த சோனியா காந்தி
டெல்லி: மோடி அரசின் கொள்கைகளை கண்காணித்து பதில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் 4 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.
மத்திய அரசின் கொள்களை கண்காணிக்க காங்கிரஸ் ஆய்வு மற்றும் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் 4 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. சந்தீப் தீக்சித், ரந்தீப் சுர்ஜிவாலா, சஞ்சய் நிருபம், ராஜீவ் கவுடா அடங்கிய இந்த குழு மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளின் சாதகங்கள், பாதகங்களை கண்டறியும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்கள், கொள்கைகளை பாஜக பெயரை மட்டும் மாற்றிவிட்டு அதை தங்களுடையது என்று கூறுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சுத்தமான இந்தியா திட்டத்தையும் பாஜக தங்களுடையது என்று பொய்யாக பெருமை பேசுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருக்கையில் 12 பேர் கொண்ட குழு ஒன்று இருந்தது. ஆனால் அந்த குழு செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில் புது குழு குறித்து நிருபம் கூறுகையில்,
அரசை நாங்கள் கண்காணித்து வருவோம். கொள்கைகள் பற்றி ஆய்வு செய்து அதில் உள்ள மறைமுக விவரங்களை வெளிக்கொண்டு வருவோம் என்றார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதையடுத்து தான் காங்கிரஸ் சூதானமாக செயல்பட முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications