மீராகுமார், கபிசிபல், வீரப்பமொய்லி, சச்சின் பைலட், சசிதரூர் உள்ளிட்ட காங். தலைவர்கள் பின்னடைவு
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

கர்நாடக மாநிலம் சிக்பல்லபூர் தொகுதியில் மத்திய அமைச்சர் கபில்சிபல் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் அம்மாநில முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளருமான குமாரசாமி முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் சசிதரூர் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ராஜஸ்தானின் அஜ்மீரில் ராகுலின் நண்பர் சச்சின் பைலட் தோல்வி முகத்துடன் இருக்கிறார். சபாநாயகர் மீராகுமார் போட்டியிடும் சாசராம் தொகுதியில் பின்னடைவில் இருக்கிறார்.
அமேதி தொகுதியில் சிறிது நேரம் பின்னடைவை சந்தித்திருந்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications