பாஜக vs NOTA.. நோட்டாவுக்கு தீவிரமாக ஓட்டு கேட்கும் காங்கிரஸ்! மத்திய பிரதேசத்தில் வினோதம்! பின்னணி?
இந்தூர்: காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை லோக்சபா தேர்தலுக்கான 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

முதல் மூன்று கட்ட தேர்தல்களில் மத்திய பிரதேசத்தில் உள்ள 21 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. உஜ்ஜைன், இந்தூர் ஆகிய தொகுதிகளுக்கு 4-வது கட்டமாக மே 13 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மாலையுடன் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது.
இந்தூர் தொகுதியில் சிட்டிங் பாஜக எம்.பி. சங்கர் லால்வானி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் களத்தில் வேட்பாளரே இல்லாத நிலை உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக அக்சய் காந்தி பாம் களமிறக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென வேட்பு மனுவை வாபஸ் பெற்றுவிட்டார் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்சய் காந்தி பாம். மேலும், அவர் உடனடியாக பாஜகவில் இணைந்தார். இதனால், அங்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தூர் லோக்சபா தொகுதியில் 9 சுயேச்சைகள் உட்பட 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், பலம் வாய்ந்த வேட்பாளர் யாரும் இல்லாததால் அங்கு பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு அங்கு வேட்பாளரே இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சியும் தற்போது அங்கு பிரச்சாரம் செய்து வருகிறது.
தங்கள் கட்சிக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பாஜகவுக்கு பாடம் கற்பிப்பதற்காக மே 13 அன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா பட்டனை அழுத்துமாறு மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்தூர் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் கூறுகையில், "ஜனநாயக விரோத வழியில் தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. இப்போது, ஜனநாயகத்தின் சக்தியை மக்களுக்கு காட்ட விரும்புகிறோம். பாஜகவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க மக்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைய விதிப்படி, ஒரு தொகுதியில் வேட்பாளர்கள் எல்லோரையும் விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகி இருந்தாலும், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!











Click it and Unblock the Notifications