பலாத்கார புகார்: ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் காங். கட்சியில் இருந்து சஸ்பென்ட்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: பாலியல் பலாத்கார புகாருக்குள்ளான ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் பாபுலால் நாகர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில அமைச்சராக இருந்தவர் பாபுலால் நாகர். அவர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 35 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார். இந்தப் புகாரை போலீசார் ஏற்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி தாம் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தைத் தெரிவித்தார்.

இதனால் பாபுலால் நாகரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் பாபுலால் நாகர் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதுடன் அவரது படுக்கை அறையையும் சீல் வைத்தனர். இதன் எதிரொலியாக அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

Congress suspends former Rajasthan minister Babulal Nagar

இந்நிலையில் பாபுலால் நாகரை காங்கிரஸ் கட்சி மேலிடம் சஸ்பென்ட் செய்துள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாபுலால் நாகர், என்னைப் பற்றிய உண்மை விரைவில் காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரிய வரும். கட்சியின் கதவுகள் எனக்காகவே திறந்து இருக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+