திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்: புதைகுழியில் இருந்து மீண்டு எழுமா காங்கிரஸ்?
அகர்தலா/கோஹிமா/ஷில்லாங்; நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களில் கோலோச்சி கொண்டிருந்த நிலையில் இப்போது புதைகுழிக்கு அனுப்பிவைக்கப்பட்ட காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழுமா? என்பது அரசியல் பார்வையாளர்களின் கேள்வி.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக காலூன்றவே முடியாது என சிலிர்த்துக் கொண்டு நின்றது காங்கிரஸ் என்பது ஒரு காலம். ஆனால் இப்போது பாஜக அம்மாநிலங்களில் கோலோச்சிக் கொண்டிருக்க காங்கிரஸ் எங்கே இருக்கிறது என தேடவேண்டிய துர்பாக்கிய நிலைதான்.

மேகாலயா மாநிலத்தில் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் என்பிபி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி என்பதே காணாமல் போய்விட்டது. காங்கிரஸ் கட்சியினர் இப்போது திரிணாமுல் காங்கிரஸ், என்பிபி கட்சியினராக உருமாறிவிட்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவிவிட்டனர். இப்போது மேகலாயா மாநில சட்டசபையில் காங்கிரஸுக்கு ஒரு எம்எம்எல்ஏ கூட இல்லையே என்கிற பரிதாப நிலைதான்.
ஆனாலும் 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் எப்படியும் உயிர்பெற முடியும் என நம்பிக்கையுடன் உள்ளது காங்கிரஸ். இதற்காக ஒவ்வொரு மாவட்டம், வட்டமாக காங்கிரஸ் நிர்வாகிகள் பயணம் சென்று கட்சியை மறுசீரமைக்க முடியுமா என ஆராய்ந்து வருகின்றனர். அடிமட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை மீள் கட்டமைப்பு செய்தாக வேண்டிய நிலைதான் மேகாலயாவில் உள்ளது. இப்போதே காங்கிரஸ் வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் இன்னமும் ஒருவித நம்பிக்கையோடுதான் இருக்கிறது மேகாலயாவில்!
நாகாலாந்து மாநிலத்திலும் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்ட நிலைதான். ஆனாலும் நாகாலாந்து மாநிலத்தின் 60 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. ஜேடியூ உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது. 2018-ம் ஆண்டு நாகாலாந்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் கூட வெல்லவில்லை. 11 லட்சம் வாக்காளர்களில் சுமார் 30,000 வாக்குகளைக் கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. 2015-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏக்கள் மாநில கட்சியான என்பிஎப்-ல் ஐக்கியமாகினர். அதன்பின்னர் காங்கிரஸை தேடிக் கொண்டிருக்க வேண்டிய கதிதான். இத்தனைக்கும் நாகாலாந்தில் பாஜகவுக்கு எதிரான அலை இருந்தபோதும் அறுவடை செய்ய காங்கிரஸ் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2023-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கும் மற்றொரு வடகிழக்கு மாநிலம் திரிபுரா. இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது திரிபுரா. ஒற்றை சீட்டுக்கே போராடிக் கொண்டிருந்தது பாஜக. ஆனால் காலம் காங்கிரஸ் வழியாக பாஜகவுக்கு கதவை திறந்துவிட்டது. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் பாஜகவாக மாறியது. திரிபுராவில் காங்கிரஸ் கட்சியினர் அத்தனை பேரும் பாஜகவினராக மாறினர். இதனால் திரிபுராவில் இடதுசாரிகள் வீழ்த்தப்பட்டு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. திரிபுராவில் இப்போதும் பாஜக எனும் மாஜி காங்கிரஸ், இடதுசாரிகள் இடையேதான் போட்டி. காங்கிரஸ் எனும் பேரியக்கம் இந்த மாநிலத்திலும் ரேஸிலேயே இல்லை என்பது எத்தனை பெரிய துயரம். இருந்தாலும் வடகிழக்கு மாநிலங்களில் புதைகுழியில் இருந்து புறப்பட்டு எழுவோம் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது காங்கிரஸ்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications