99 சீட்டைத் தாண்டாது காங்கிரஸ்.. சொல்கிறார் ஜேட்லி
டெல்லி: இரட்டை இலக்கத்துக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த லோக்சபா தேர்தலில் கிடைக்காது என்று பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மேலும், தேர்தலுக்குப் பின்னர் மூன்றாவது அணி உருவாகி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நிலையற்ற கொள்கைகளைக் கொண்ட வியாபாரிகளின் கூட்டம்தான் 3வது அணி என்றும் அவர் சாடியுள்ளார்.
இதுகுறித்து தனது பிளாக்கில் அவர் எழுதியுள்ளதாவது...

தோல்வியே கிடைக்கும்
3வது அணிக்காக பலமுறை முயற்சித்தவர்கள் மீண்டும் கூடுகிறார்கள். ஆனால் இம்முறையும் அவர்களுக்குத் தோல்வியே கிடைக்கும்.

வசதிக்காக கூடுபவர்கள் அவர்கள்
இவர்கள் வசதிக்காக கூடுபவர்களே தவிர கொள்கைக்காக கூடுபவர்கள் அல்ல. நல்லாட்சியை இவர்களால் ஒருபோதும் தர முடியாது.

இரட்டை இலக்கத்துக்கு மேல் சான்ஸ் இல்லை
காங்கிரஸைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் அவர்களுக்கு இரட்டை இலக்க எண்களிலேயே சீட் கிடைக்கும்.

மோடிக்கு முன் காங்கிரஸ் எடுபடாது
மோடிக்கு முன்பு காங்கிரஸ் எடுபடாது. மோடியைத் தடுக்க காங்கிரஸால் முடியாது.

மோடியைப் பார்த்து காங்கிரஸ் பயப்படுகிறது
கடந்த 12 வருடமாகவே மோடியைப் பார்த்து காங்கிரஸார் பயந்து வருகின்றனர் என்று எழுதியுள்ளார் ஜேட்லி.












Click it and Unblock the Notifications