கெஜ்ரிவால் உருவ பொம்மையை எரித்து பஞ்சாப் மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
லூதியானா: பஞ்சாப் மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் பல்பிர் ராணி சோதி தலைமையில், ஏராளமான பெண்கள் மற்றும் காங்கிரசார் திரண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகின்றது. அதற்கான, பிரச்சார பயணமாக அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் சென்றுள்ளார். அங்கு, நான்கு நாட்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தங்கியுள்ள ஓய்வு இல்லம் அருகே பஞ்சாப் மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் பல்பிர் ராணி சோதி தலைமையில், ஏராளமான பெண்கள் மற்றும் காங்கிரசார் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கெஜ்ரிவாலின் உருவ பொம்மையை எரித்தும் முழக்கமிட்டனர்.
இதனால், கெஜ்ரிவால் தங்கியிருந்த பகுதி அருகில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், காவல்துறையினர் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். முன்னதாக, ஆம்ஆத்மி எம்பி, எம்எல்ஏக்கள் தரக்குறைவாக நடந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவால் டெல்லியில் இருந்து பஞ்சாப் கிளம்பும் போது அங்கு பெண்கள் வளையல்களை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications