விலைவாசி உயர்வு: நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் காங். போராட்டம்: போலீசார் தடியடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. அவை துவங்கியதுமே அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை முதலில் நண்பகல் 12 மணி வரையிலும் பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் பிறகு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பாஜகவுக்கு எதிராகவும், விலை உயர்வை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விலை உயர்வு பிரச்சனையை எழுப்பி அவைக்குள்ளும், அவைக்கு வெளியும் காங்கிரஸ் தனது எதிர்ப்பை காட்டி வருகிறது. இந்நிலையில் எந்த நேரத்தில் எந்த காயை நகர்த்த வேண்டும் என்பது காங்கிரஸுக்கு நன்கு தெரியும் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+