மட்டர் பன்னீர் ஆர்டர் கொடுத்தா? சிக்கன் கறியையா அனுப்புவீங்க? பிரபல ஹோட்டலுக்கு நேர்ந்த கதி!
போபால்: மத்திய பிரதேசத்தில் மட்டர் பன்னீர் ஆர்டர் கொடுத்ததற்கு சிக்கன் கறியை அனுப்பி வைத்த பிரபல உணவு விடுதிக்கு 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மத்திய பிரதேசத்தில் மிகவும் பிரபலமான கிளப்களில் ஒன்றாக விளங்கும் ஜிவாஜி கிளப் மூலம் பல்வேறு உணவு விடுதிகளும் நடத்தப்படுகின்றன. இந்த உணவு விடுதிகளில் ஆன்லைன் டெலிவரி சேவையும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் கவாலியரில் வழக்கறிஞர் ஸ்ரீவஸ்தவா என்பவர் தனது குடும்பத்தினருக்காக பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமோட்டோ மூலம் ஜிவாஜி கிளப் உணவு விடுதியில் இருந்து மட்டர் பன்னீர் ஆர்டர் செய்து இருக்கிறார்.

சிக்கன் கறியை கண்டு முகம் சுழித்தனர்
ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே சோமோட்டா டெலிவரி மேனும், உணவு பொட்டலத்தை கொடுத்து விட்டு சென்று விட்டார். இதை வாங்கிய ஸ்ரீவத்சவா குடும்பத்தினர் மட்டர் பன்னீரை ஒரு கை பார்த்துவிடலாம் என திறந்து பார்த்த போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் முற்றிலும் சைவ பிரிய குடும்பத்தினரான அவர்கள் உள்ளே இருந்த சிக்கன் கறியை கண்டு முகம் சுழித்தனர்.

நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையீடு
இதனால் கடுப்பான ஸ்ரீவத்சவா இது குறித்து உணவு விடுதியை சேர்ந்தவர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால், இதற்கு அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை. இதனால், மேலும் கடுப்பான அவர் மட்டர் பன்னீரை ஆர்டர் செய்ததற்கு சிக்கன் கறியை கொடுத்த உணவு விடுதி நிறுவனத்துக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தார். அதன்படி, ஸ்ரீவத்சவா தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

தக்க பாடம் புகட்ட வேண்டும்
அந்த மனுவில், சுத்த சைவ குடும்பமான தங்கள் குடும்பம், அந்த உணவு விடுதியினர் சிக்கன் கறியை தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியது. இதனால், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டோம். எனவே, நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உணவு விடுதிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் தங்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முறையிட்டு இருந்தார்.

ரூ. 20 ஆயிரம் அபராதம்
இந்த மனுவை விசாரித்த கவாலியர் நுகர்வோர் நீதிமன்றம், உணவு விடுதிக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்ததோடு வழக்கு செலவுக்கு ஆன தொகையையும் மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என்று உணவு விடுதிக்கு உத்தரவு பிறப்பித்தது.

ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்
உணவு விடுதிகள் இதுபோன்று தவறுதலாக டெலிவரி செய்வதும், நுகர்வோர் நீதிமன்றங்களை மக்கள் நாடுவதும் இது முதல் முறையல்ல. ஏற்கனவே, நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு அசைவ பீட்சா டெலிவரி செய்யப்பட்டு விட்டதாகவும் தனது மத நம்பிக்கைக்கு எதிராக இது அமைந்ததால், வாழ்நாள் முழுவதும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று வேதனையடைந்துள்ளார். இதில் அவர் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் நீதிமன்றத்தின் கதவை தட்டியது நினைவிருக்கலாம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications