ஸ்மார்ட்போன் “வைரஸ்” தாக்குதலில் இந்தியாவிற்கு 2ஆம் இடம் - கேஸ்பர்ஸ்கி தகவல்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: உலகம் முழுவதும் உபயோகிக்கப்படும் ஸ்மார்ட்போன்களில் வைரஸ் தாக்குதல் ஏற்படுவதில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக கேஸ்பர்ஸ்கி ஆன்டிவைரஸ் ஆய்வகம் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகளவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து வருகிறது.

அதற்கேற்றவாறு சைபர் கிரிமினல்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக பிரபல ஆன்டி வைரஸ் மென்பொருளான கேஸ்பர்ஸ்கி தெரிவித்துள்ளது.

முதலிடத்தில் இந்தியா:

முதலிடத்தில் இந்தியா:

இதுதொடர்பாக கேஸ்பர்ஸ்கி ஆய்வகம் நடத்திய ஆய்வில் உலகிலேயே அதிகளவில் ஸ்மார்ட்போன் வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகியிருப்பதில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களில் அதிகம்:

ஸ்மார்ட்போன்களில் அதிகம்:

குறிப்பாக மால்வேர் எனப்படும் வைரஸ்களின் தாக்குதல் இந்திய ஸ்மார்ட்போன்களில் அதிகம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதிகரிக்கும் இணையப் பயன்பாடு:

அதிகரிக்கும் இணையப் பயன்பாடு:

பொருட்களை வாங்குவது, வங்கி பரிமாற்றங்கள், டாக்ஸி போன்ற வாகனங்களை புக்கிங் செய்வது என அனைத்திற்கும் இணையத்தை சார்ந்திருக்கும் நிலை அதிகரித்து வருகின்றது.

பணப்பரிமாற்றம் ஜாக்கிரதை:

பணப்பரிமாற்றம் ஜாக்கிரதை:

இந்த சூழ்நிலையில் மால்வேர் தாக்குதல்கள் ஸ்மார்ட்போனில் இருந்து பல்வேறு சொந்த தகவல்களையும், பணப் பரிமாற்ற தகவல்களையும் சைபர் கிரிமினல்கள் திருடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கேஸ்பர்ஸ்கி எச்சரித்துள்ளது.

கவனம் அவசியம்:

கவனம் அவசியம்:

இந்த தகவலை கேஸ்பர்ஸ்கி ஆய்வகத்தின் தெற்கு ஆசிய இயக்குனர் இத்தாப் கால்தே தெரிவித்துள்ளார். அதனால் இணையவழி பயன்பாடுகளில், முக்கியமாக ஸ்மார்ட்போன் உபயோகத்தில் கவனம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+