குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்கள் பலாத்காரம்.. ரகசிய வீடியோவால் அம்பலமான "சாமியார்"!
லக்னோ: குழந்தை பாக்கியம் தருவதாக கூறி ஆசிரமத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஹராய் கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வருபவர் ராம் சங்கர் திவாரி. இவர் தனது பெயரை பரமானந்த பாபா என்று கூறிக்கொண்டு ஆசிரமம் நடத்தி வந்தார்.
பெண்கள் மீது மோகம் கொண்ட வயது முதிர்ந்த இந்த சாமியார், அதற்காக தேர்ந்தெடுத்தது குழந்தையில்லாத பெண்களையாகும்.

வசீகர பேச்சு
குழந்தையின்றி மனமுடைந்து வரும் பெண்களை வசீகரிக்கும் வகையில் பேசி, குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பரிகார பூஜை செய்ய ஒப்புக்கொள்ள வைப்பாராம், திவாரி.

சம்மதிக்க வைத்து
இதன்பிறகு, தன்னோடு பாலியல் உறவு வைத்துக்கொண்டால் குழந்தை கிடைக்கும் என்று அந்த பெண்களை நம்ப வைத்து, அவர்கள் சம்மதத்தோடு உறவு வைத்துக்கொள்வாராம்.

சிசிடிவி கேமரா
வீட்டு மேற்கூரையில் ரகசிய கேமராவை பொருத்திக்கொள்ளும், திவாரி, விதவிதமான பெண்களுடன், தான் உடலுறவு கொள்ளும் காட்சிகளை பிறகு வீடியோவாக பார்த்து ரசிப்பது வழக்கமாம்.

மூச் விடக்கூடாது
உடலுறவு கொண்ட பெண்களிடம் இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டே வெளியே அனுப்பி வந்துள்ளார் திவாரி. ஆனால் சில பெண்கள் பின்னர் இதுகுறித்து, வெளியே கூறினர்.

வெளியான வீடியோ
ஆனால், அந்த புகார்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் திவாரியின் பித்தலாட்டம் வெளியுலகுக்கு தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், சில பெண்களுடன் இவர் ஆபாசமான நிலையில் உள்ள வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

கைது
இதுதொடர்பான ஆதாரத்துடன் போலீசாரிடம் உள்ளூரை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அந்த போலி சாமியாரை இன்று கைது செய்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பலான சிடிகள் பறிமுதல்
ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஆபாச வீடியோக்களும், ஆபாச புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில், அவர் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளது தெரியவந்துள்ளது.

படம் பார்த்து பலாத்காரம்
தான், Basic Instinct என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் பெரிய விசிறி என்று போலீஸ் விசாரணையில் திவாரி தெரிவித்துள்ளார். அந்த படத்தின் பாதிப்பில் பல பலாத்காரங்களை செய்ததாகவும் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications