கரண்ட் பில் அதிகம்தான்..மரத்தடியில் உட்காருங்க- நக்கலடித்த அஸ்ஸாம் சபாநாயகர் வீட்டில் 22 ஏசிகள்!
குவஹாத்தி: மின் கட்டண உயர்வால் மின்சாரத்தை பயன்படுத்தாமல் மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாருங்க என கிண்டலடித்த அஸ்ஸாம் மாநில ஆளும் பாஜக அரசின் சபாநாயகர் பிஸ்வாஜித் தைமாரி வீட்டில் 22 ஏசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்ஸாம் மாநில ஆளும் பாஜக் அரசு தொடர்ந்து மின் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த விமர்சனங்களுக்கு சபாநாயகர் பிஸ்வாஜித் தைமாரி பதில் அளிக்கையில், ஆமாம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தை உங்களால் செலுத்த முடியவில்லை எனில் ஃபேன் சுவிட்சை எல்லாம் போடாதீர்கள். வீட்டுக்கு வெளியே போய் மரத்தடியில் அமர்ந்து கொள்ளலாம். மாநில அரசானது மின்சாரத்தை தனியாரிடம்தான் வாங்கி வருகிறது. அந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலையை அதிகரித்து விடுகின்றன,. அதனால்தான் மாநில அரசும் மின்சார கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றார்.

அஸ்ஸாம் சபாநாயகர் பிஸ்வாஜித் தைமாரியின் இந்த பதில் அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கமலாக்யா தேய் புர்கயசதா, பிஸ்வாஜித் தைமாரியின் வீடு முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலாக்யா தேய் புர்கயசதா, சபாநாயகரின் அதிகாரப்பூர்வ வீட்டில் மொத்தம் 22 ஏசிகள் பொருத்தப்பட்டுள்ளன. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. வீட்டு பாதுகாவலர்களின் ஓய்வு அறையிலும் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு எப்படி மக்களின் துயரம் தெரியும்? என்றார். மேலும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அஸ்ஸாம் மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் சபாநாயகர் பிஸ்வாஜித் என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி சுஷ்மிதா தேவ் கூறுகையில், ஒரு அரசாங்கம் என்பது மக்களுக்கானது. ஆனால் பாஜக தலைவர்களோ மக்களை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதில் ஒன்றுதான் சபாநாயகர் பிஸ்வாஜித்தின் மரத்தடியில் ஓய்வெடுங்கள் என்கிற கருத்து என்றார்.
இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த சபாநாயகர் பிஸ்வாஜித், நான் சொன்னதில் எந்த தவறுமே இல்லை. என்னுடைய கருத்துகளை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர் என கூறியுள்ளார்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications