பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ.. இளைஞர் கைது.. போலீசார் கண்டிப்பு!
அஹமதாபாத்: மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முதல்நாள் குன்னூரில் விபத்துக்கு உள்ளானது. இதில் பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் இன்று இவர்களுக்கு இறுதி மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

துக்கம்
இவர்களின் மறைவிற்கு மொத்த இந்தியாவே துக்கம் அனுசரித்து வருகிறது. நாடு முழுக்க மக்கள் பலர் இவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் சிலர் பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மரணம் குறித்து சந்தேகம் எழுப்பி சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

குஜராத்தை சேர்ந்த நபர்
இதையடுத்து இந்த விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது. இதை பற்றி விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படும். விபத்து தொடர்பான உண்மைகள் வெளிவரும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள், என்று தெரிவித்துள்ளது.

குஜராத்தை சேர்ந்த நப
இந்த நிலையில்தான் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தை சேர்ந்த ஷிவாபாய் ராம் என்ற நபர்தான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிபின் ராவத் மரணம் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்
Shivabhai Ahir என்ற தனது பேஸ்புக் பக்கத்தில் இவர் இந்த வீடியோவை வெளியிட்ட நிலையில் அவர் கைதானார். இந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுவிட்டது. பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இவர் பேசியதாக கூறப்படுகிறது. இவரை கைது செய்த குஜராத் போலீசார், அவர் வெளியிட்ட வீடியோவிற்காக மட்டும் கைது நடக்கவில்லை.

வழக்கு
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதற்கு முன்பே இப்படி நிறைய போஸ்ட்களை செய்துள்ளார். இதற்கு முன்பும் சில அரசியல் தலைவர்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் தவறாக பேசி உள்ளார். இதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுத்தோம் என்று கூறியுள்ளனர். 153-A, 295-A ஆகிய பிரிவுகளின் கீழ் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்
அதேபோல் ராஜஸ்தானிலும் இதே காரணத்திற்காக இன்னொரு இளைஞர் கைது செய்யப்பட்டார். பிபின் ராவத் மரணம் குறித்து தவறாக பேசிய ஜவாத் கான் என்ற இளைஞர் ராஜஸ்தான் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications