ஹோட்டலில் விபச்சாரம்.. 2 பேர் கைது.. 2 பெண்கள் மீட்பு
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள் ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த ஹோட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அமர் பிரேம்தாஸ் தேஷ்பிராதர் மற்றும் ரமேஷ் பகேலால் குப்தா ஆகிய இரண்டு புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3000 பணம் மற்றும் இதர பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் போலீசார் மீட்டனர். அவர்கள் இருவரும் அரசு காப்பகத்தில் ஒப்படைப்பட்டுள்ளனர்.
பாலியல் புரோக்கரான அமர் பிரேம்தாஸ் தேஷ்பிராதர் பெண்களை காரில் அழைத்து வந்து ஹோட்டலில் விடுவதும், அவர்களுக்கு ஹோட்டல் மேனேஜர் ரமேஷ் பகேலால் குப்தா அறைகள் ஒதுக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட புரோக்கர்களின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாலியல் தொழில் புரோக்கர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாக்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications