கொரோனா- இத்தாலியில் தொடரும் பயங்கரம்- ஒரே நாளில் 743 பேர் பலி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,820
ரோம்: கொரோனாவால் இத்தாலியில் ஒவ்வொருநாளும் பல நூறு பேர் மாண்டு வருகின்ற பெருந்துயரமும் தொடருகிறது. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,820 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்கம் தொடங்கிய சீனா தற்போது அதில் இருந்து விடுபட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனாலும் உலகம் இதனை முழுவதுமாக நம்பவும் இல்லை.
ஏனெனில் கொரோனாவின் தாக்கம் உலகையே நிர்மூலமாக்கி வருகிறது. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக கொரோனா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இத்தாலி சோகம்
இத்தாலியில் ஒவ்வொருநாளும் கொரோனாவால் பல நூறு பேர் பலியாகி வருகின்றனர். இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6820 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா- ஸ்பெயின் நிலவரம்
இதேபோல் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000. ஸ்பெயினில் மேலும் 6,000 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,673. ஸ்பெயினில் 2,700 பேரை கொரோனா பலி கொண்டிருக்கிறது.

பிரான்ஸில் 240 பேர் பலி
பிரான்ஸில் கொரோனா மேலும் 240 பேரின் உயிரை குடித்திருக்கிறது. பிரான்ஸில் மட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 1,100 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் கொரோனாவால் ஒரேநாளில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 15, மலேசியாவில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,624.

இலங்கையில் 100பேர் பாதிப்பு
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. இதனிடையே சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவரால்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரங்களை சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications