சீனா பாணியில் ஒடிசா அரசு அதிரடி.. 5 மாவட்டங்கள், 8 நகரங்களுக்கு சீல்.. மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி
புவனேஸ்வர்: கொரோனா வைரஸ் பிரச்சினை பெரிதாகி கொண்டிருக்கக் கூடிய நிலையில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், முக்கியமான முடிவை எடுத்துள்ளார். இதன்படி 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் முதல் 29ம் தேதி வரை 5 மாவட்டங்களில் முழுவதும், சீல் வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்கள்-கோர்டா, கட்டாக், கஞ்சம், கேந்திரபாரா, அனுகுல் மற்றும் 8 நகரங்கள்-பூரி, ரூர்கேலா, சம்பல்பூர், ஜார்சுகுடா, பாலசோர், ஜஜ்பூர் சாலை, ஜஜ்பூர் டவுன் மற்றும் பத்ராக் ஆகியவை சீல் வைக்கப்படும்.

வீடுகளுக்குள்ளேயே மக்கள் இருக்குமாறும், மிக அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே, வீட்டை விட்டு வெளியே வரும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், மருந்துகள், காய்கறிகள், மாமிசம், பால் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடிய கடைகள் மட்டும் திறந்து இருக்கும்.
மின்சாரம், குடிநீர், வங்கிகள், ஏடிஎம்கள், பெட்ரோல் பம்ப் ஆகியவையும் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 12 மணி முதல் 70 ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் இரண்டு பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது.

அடையாளம் காணப்பட்ட இரு நோயாளிகளும், ஆரோக்கியமான நிலையில் உள்ளனர். இவர்களுடன் 56 பேர் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
எந்த ஒரு மீடியாவும் நோயாளிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களிடம் பேட்டி எடுப்பதும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு உணவு வழங்கக்கூடிய கடமையை உணர்ந்து மாநில உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி ஒரு மாதத்திற்கு வழங்கப்படும். ஒரு ரூபாய் என்ற விலையில் இது வழங்கப்படும். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் இவை வழங்கப்படும். 24ஆம் தேதி அரிசி விநியோகம் ஆரம்பிக்கும்.
இவ்வாறு முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். நகரங்களை சீல் வைப்பது சீனா மாடல் டெக்னிக்காகவும், அதை கையில் எடுத்து அதிரடி காட்டியுள்ளார் நவீன் பட்நாயக்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications