கொரோனா வைரஸ் அச்சம்: மியான்மர் எல்லையை காலவரையின்றி மூடியது மணிப்பூர் அரசு
மோரே: கொரோனா வைரஸ் அச்சத்தால் மியான்மர் சர்வதேச எல்லையை காலவரையின்றி மூடியுள்ளது மணிப்பூர் மாநில அரசு.
Recommended Video
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 4,027 பேர் பலியாகி உள்ளனர். 1,14,422 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 44 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்கிமுக்குள் பிற மாநிலத்தவர் நுழைவதை தடுக்க இன்னர் லைன் பெர்மிட் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அருணாசல பிரதேசம், சீனாவுடனான எல்லையை மூடியுள்ளது.
Manipur CM N. Biren Singh: In view of the possible threat of transmission of #Coronavirus / COVID-19, the international border with Myanmar has been closed including gate no 1 and 2 in Moreh until further orders. pic.twitter.com/KTNm69mTyp
— ANI (@ANI) March 10, 2020
ஏற்கனவே பூடான் நாடும் இந்தியா, சீனாவுடனான எல்லைகளை மூடியிருக்கிறது. இந்த நிலையில் மணிப்பூர் மாநில அரசு மோரேவில் உள்ள மியான்மர் நாட்டுடனான சர்வதேச எல்லையை காலவரையின்றி மூடுவதாக அறிவித்துள்ளது.

மியான்மரில் இருந்து இந்தியாவின் மோரே நகருக்குள் காலை முதல் மாலை வரை அந்நாட்டவர் நாள்தோறும் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதேபோல் மோரே பகுதியில் இருந்து மியான்மரின் குறிப்பிட்ட பகுதிக்குள் இந்தியர்கள் செல்லவும் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது மணிப்பூர் அரசு எல்லைகளை காலவரையின்றி மூடி இருப்பதால் இந்த வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா- மியான்மர் நாடுகளை இணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க இரும்பு பாலமும் மூடப்பட்டுள்ளது. இந்த இரும்புப் பாலம் சாலை மார்க்கமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications