Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ1,000க்கு விற்கப்பட்ட மத்திய அரசு ஆவணங்கள்.. அதிர வைக்கும் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வாரி வழங்குகிறார். அதே நேரத்தில் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மத்திய அரசின் ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கு விசாரணையும் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றது.

அன்மையில் மத்திய வனத்துறை அமைச்சக பணியாளர் மற்றும் யு.பி.எஸ்.சி. பணியாளர் என இருவர் கைது செய்யப்பட்டனர். வனத்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த ஒரு ஆவணமும் திருடப்படவில்லை..ஆனால் பிற அமைச்சகங்களில் உள்ள பணியாளர்களுடனான நட்பின் அடிப்படையில் ஆவணங்களைத் திருடுவதற்கு அவர் உதவியிருக்கிறார் என்கின்றனர் டெல்லி போலீசார்.

Corporate espionage- Middlemen stole documents for Rs 1000

வனத்துறை அமைச்சக பணியாளரான ஜிதேந்தர் நாக்பால் இப்படி ஆவணங்களை கசியவிட்டதன் மூலம் தொடர்ச்சியாக ரூ1 லட்சம் ஆதாயம் அடைந்து வந்துள்ளார். இவர் வனத்துறையில் இணை செயலருக்கு தனிச்செயலராக இருப்பவர்.

யு.பி.எஸ்.சி. உறுப்பினர் ஒருவரின் உதவியாளராக இருக்கும் விபன்குமாரும் இப்போது சிக்கியிருப்பவர்.. பொதுவாக நாக்பாலும் விபன்குமாரும் இதர அமைச்சகங்களில் பணிபுரியும் நண்பர்கள் உதவியுடன் ஆவணங்களைத் திருடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று ஆதாயம் அடைந்திருக்கின்றனர். இந்த மோசடி கடந்த 12 ஆண்டுகளாக தொடர் கதையாக நடந்திருக்கிறது.

இந்த 12 ஆண்டுகாலத்திலும் தாங்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து ஒரு ஆவணத்தைக் கூட இவர்கள் கசியவிட்டதும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

பொதுவாக ஒரு இ மெயிலை உருவாக்கி அதில் draft பகுதியில் அமைச்சக ஆவணங்களை சேவ் செய்து வைத்துவிடும் யுக்தியையே கடைபிடித்து வைத்துள்ளனர். அதேபோல் செல்போன்களில் பேசினால் அது தனிப்பட்ட உறவு முறையிலான உரையாடலாக மட்டுமே இருக்குமாறும் கவனமாக நடந்து கொண்டிருக்கின்றனர்.

விபன்குமாரும் நாக்பாலும் தனியார் ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த லோகேஷ் சர்மா என்பவருக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளனர். லோகேஷ் சர்மா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் தமக்கு கிடைத்த ஆவணங்களை வேறு சில ஆலோசனை நிறுவனங்களுக்கு விற்று பணம் சம்பாதித்திருக்கிறார்.

இப்படி ஆவணங்களைப் பரிமாறுவதற்கு இடைத்தரகர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்த இடைத்தரகர்களுக்கான தொகை என்பது கொடுக்கும் ஆவணத்தின் மதிப்பைப் பொறுத்ததுதானாம். சில நேரங்களில் ரூ1,000, ரூ 2,000 என சொற்பத் தொகையும் கூட இடைத்தரகர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இடைத்தரகர்களுக்கு மிக அதிகபட்சமாக ரூ50 ஆயிரம் கொடுத்திருக்கின்றனராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+