மானநஷ்ட வழக்கு: கோர்ட்டில் ஆஜராகாத ஷீலா தீட்சித்திற்கு ரூ5 ஆயிரம் அபராதம்
டெல்லி: மானநஷ்ட வழக்கில் டெல்லி கோர்ட்டில் ஆஜராகாத ஷீலா தீட்சித்திற்கு ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது..
டெல்லி பா.ஜ.க. தலைவர் விஜேந்தர் குப்தா , ‘டெல்லி மக்களை ஏமாற்றியவர் என்றும் வில்லி என்றும் வேதாளம்' எனத் தன்னை விமர்சித்ததாக கூறி டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் நேற்று, விஜேந்தர் குப்தாவின் வக்கில் ஷீலா தீட்சித்திடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கு விசாரணையின் போது ஷீலா தீட்சித் ஆஜராகவில்லை.

அப்போது, ஷீலா சார்பில் ஆஜரான வக்கீல், ‘எனது கட்சிக்காரருக்கு சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முக்கியமான பணிகள் உள்ளதால் அவரால் இன்று கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை' என நிதிபதியிடம் தெரிவித்தார்.
இதனை நீதிபதி ஏற்றுக் கொண்ட போதும், ‘குறிப்பிட்ட நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக தவறிய ஷீலா தீட்சித் மறுமுறை கோர்ட்டில் ஆஜராகும் போது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications