பாலியல் பலாத்காரம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து... முலாயம் சிங் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
லக்னோ : ஒரு பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்வது சாத்தியமற்றது என்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் அவ்வபோது சர்ச்சை குறிய கருத்துகளில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முலாயம் சிங் யாதவ், கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும், நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்வது என்பது எப்படி நடக்க முடியும் என்றும் கூறினார்.
முலாயம் சிங் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்துக்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அவரது பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த ஷாசியா இல்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஷோபா ஓஜா இதுபோன்ற பேச்சுக்கள்தான் சமூக விரோதிகளுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் குல்பகாத் சிவில் நீதிமன்றம் இந்த விவகாரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு தாமாக வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளது.
முலாயம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 16 ஆம் தேதி ஆஜராகுமாறு முலாயம் சிங்குக்கு சம்மன் அனுப்ப நீதிபதி அங்கித் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications