'சாய்பாபா' மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: பிரதமர் மோடிக்கு உறவினர் கடிதம்
நகரி: சாய்பாபா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு உறவினர் ஒருவர் கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தி சத்ய சாய்பாபா கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி காலமானார். அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது உறவினர் கணபதி ராஜு மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதுபற்றி அவர் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கணபதிராஜு கூறியதாவது:
சத்ய சாய்பாபா மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. அதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆதாரங்களுடன் கடந்த ஆட்சியின் போது அப்போதைய முதல்வரிடம் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாபா மரணத்தில் பல சதி திட்டங்கள் நடந்து உள்ளது. பாபா இறந்து 25 நாட்கள் கழித்துதான் அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் அவரது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கடத்தப்பட்டு உள்ளன. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சத்ய சாய்பாபா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும்.
எனவே இதுகுறித்து பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். அதில் எனது ஆதாரங்களையும் இணைந்து உள்ளேன்.
இவ்வாறு கணபதிராஜூ கூறினார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications