கேரளா: சி.பி.எம். மாநில மாநாட்டில் அச்சுதானந்தன் வெளிநடப்பால் சலசலப்பு!!
ஆழப்புழா: கேரளா மாநிலம் ஆழப்புழாவில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன் வெளிநடப்பு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
ஆழப்புழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாள் மாநாட்டில் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டார்.

இம் மாநாட்டில் மாநில செயலாலர் பினராய் விஜயன், மூத்த தலைவர்கள் கொடியேறி பாலகிருஷ்ணன்,வி.எஸ்.அச்சுதானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மாநில செயலாளர் பினராய் விஜயன் தாக்கல் செய்த கட்சியின் செயல்பாடு குறித்த அறிக்கையில் அச்சுதானந்தன் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்வதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. கட்சி விரோத சக்திகளை அச்சுதானந்தன் தனது கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறார் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கண்ணூர், கொல்லம் மாவட்ட மார்க்சிஸ்ட் நிர்வாகிகளும் அச்சுதானந்தன் மீது அடுக்கடுக்கான புகார்களை சுமத்தினர். இதனைத் தொடர்ந்து தமது ஆதரவாளர்களிடம் தாம் மாநாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அச்சுதானந்தன் கூறினார்.
மேலும் தம் மீதான தாக்குதல்களை கட்சி மேலிடத் தலைவர்கள் தடுப்பார்கள் என்றும் அச்சுதானந்தன் எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அச்சுதானந்தன் மாநாட்டில் இருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு செய்தியாளர்களையும் சந்திக்க அச்சுதானந்தன் மறுத்துவிட்டார்.
கட்சியின் மாநில மாநாட்டில் இருந்து அச்சுதானந்தன் வெளிநடப்பு செய்திருப்பது மார்க்சிஸ்ட் கட்சியினரிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications