டெல்லி: கார் விபத்தில் உயிர்தப்பினார் கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக்!
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தைச் சேர்ந்தவரான இந்திய கிரிக்கெட் அணி வீரர் முரளி கார்த்திக் டெல்லியில் வசித்து வருகிறார். அவர் நேற்று சாணக்யபுரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சைலோ வேன் ஒன்றுடன் முரளி கார்த்திக்கின் கார் மோதியது. இதில் முரளி கார்த்திக்கும் அவரது மனைவியும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
வேனில் இருந்த சுதீப் என்பவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அடிபட்ட ஓட்டுநரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கார்த்திக் அவருக்கு மருத்துவ உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
டெல்லி போலீசார் காலை நான்கு மணி வரை அவரிடம் விசாரணை நடத்தினர். விபத்து நடந்ததிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications