காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களைச் சந்தித்தார் சுரேஷ் ரெய்னா
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களைச் சந்தித்தார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா \அனந்த்நாக் மாவட்டத்தின் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவர் இன்று காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்திய ராணுவச் செய்தித் தொடர்பாளர் கலோனல் என்.என்.ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சந்திப்பு...
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சந்தித்தார்.
உற்சாகம்...
எல்லையில் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு இவரது வருகை பெரும் உற்சாகம் அளித்துள்ளது.
சாதனைகள்...
எல்லையில் ராணுவ வீரர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து அவர்களுடன் உரையாடித் தெரிந்து கொண்டு நெகிழ்ந்த ரெய்னா, அவர்களது சாதனைகளை கைதட்டி ரெய்னா வரவேற்றார்" எனத் தெரிவித்தார்.
பாராட்டு...
மேலும், ரெய்னாவும் சுவையான சில சொந்த அனுபவங்களை ராணுவ வீரர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும், அவர்களுடன் உணவு அருந்திய ரெய்னா அவர்களது சமையலைப் பாராட்டியதாகவும் ஜோஷி கூறினார்.