ஜம்மு காஷ்மீர் வெள்ள பாதிப்பு – பாதிக்கப்பட்டவர்களைத் தேட கூகுளின் “பெர்சன் ஃபைண்டர்”!
டேராடூன்: ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூகுள் சார்பில் ஒரு தேடுதல் பொறி உருவாக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையாகக் கொட்டித் தீர்த்த மழையால் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
60 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த பாதிப்பு நிலவி வருகின்றது.

தொடர்புகள் துண்டிப்பு:
இந்த வெள்ளத்தால், தொலைத்தொடர்புகள் கூட துண்டிக்கப்பட்டு விட்டன.
கூகுள் தேடு பொறி:
இந்நிலையில்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் "கூகுள் பெர்சன் பைண்டர்" என்ற சிறப்பு தேடு பொறி உருவாக்கப்பட்டுள்ளது.
விவரங்கள் அறியலாம்:
இதன்மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
தகவல் பகிர்வு:
இந்த இணைய பொறியின் மூலமாக தனியொருவர் தங்களைப் பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். மேலும், தங்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு என்ன நிலைமையில் இருக்கின்றார்கள் என்றும் அறிய முடியும்.
தேடும் பெயர் பதிவு:
ஒருவேளை பாதிக்கப்பட்ட பகுதியில் உங்கள் உறவினர் இருந்தால், "நான் ஒருவரைத் தேடுகின்றேன்" என்ற லிங்கை அழுத்தி, அவர்களுடைய பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
பாதுகாப்பு பற்றிய தகவல்கள்:
மற்றவர்கள் நீங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை அறிய வேண்டும் என்றால், அல்லது யாரைப் பற்றியேனும் தெரிவிக்க வேண்டும் என்றால், "என்னிடம் சில தகவல்கள் உள்ளன" என்ற லிங்கை அழுத்தி பெயர், விவரங்களைத் தெரிவிக்கலாம்.
ஒன்றிணைந்த தகவல்கள்:
பெயர் குழப்பங்கள் வராத வகையில் தேடுபவர்களை ஒன்றிணைத்து கூகுள் தகவல்களை தெரிவிக்கும். இந்த பொறியானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications