முதலை கடித்து கொல்லும் வரையா செல்ஃபி எடுப்பீங்க.. இளைஞருக்கு நேர்ந்த கதி
போபால்: ஆற்றின் தடுப்புச் சுவர் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போது கீழே விழுந்த இளைஞரை முதலை கடித்துக் கொன்ற சம்பவம் சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.
நாட்டில் உள்ள இளைஞர்களை செல்ஃபி மோகம் ஆட்டிப் படைத்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே சென்றாலே செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது இன்றைய தலைமுறையினரின் வாடிக்கையாகி விட்டது. பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கப்படும் இந்த செல்ஃபி பழக்கம், பல நேரங்களில் பெரும் ஆபத்தையும் விளைவித்து விடுகின்றன. ரயிலுக்கு முன் நின்று செல்ஃபி எடுப்பது, மலை முகட்டில் நின்று செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு இளைஞர்கள் உயிரிழப்பது அன்றாட செய்திகளாக மாறிவிட்டன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வரும் லைக்ஸ்களுக்காக உயிரை விட்ட இளைஞர்கள் ஏராளம்.

இதுபோன்ற ஒரு சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. மத்திய பிரதேசத்தின் மாண்டசோர் பகுதி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. அங்கு பாயும் சம்பல் நதியை பார்ப்பதற்காகவே நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் இங்கு வருவர். அந்த வகையில், நேற்று இந்த ஆற்றையும், அருகில் உள்ள காந்தி சாகர் அணையையும் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், காந்தி சாகர் அணையின் தடுப்புச் சுவர் மீது ஏறினார். அவரை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் இறங்குமாறு கூக்குரலிட்டனர். ஆனால் அதை சட்டை செய்யாத அவர், சுவற்றில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றார். இதில் திடீரென கால் இடறி அவர் ஆற்றுக்குள் விழுந்தார். பின்னர் நீச்சலடித்து கரைக்கு வருவதற்குள் அவரை அங்கிருந்த முதலை ஒன்று கடித்து குதறி இழுத்துச் சென்றது. பின்னர் அவரை அந்த முதலை சிறிது சிறிதாக சாப்பிட்டது. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் அலறினர்.
அந்த இளைஞர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். செல்ஃபி மோகத்தால் இளைஞர் முதலையிடம் சிக்கி உயிர்விட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications