காங். நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா மீண்டும் தேர்வு!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த லோக்சபாவில் 206 உறுப்பினர்களுடன் செயல்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 44 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி என்ற அந்தஸ்த்தினை பெற குறைந்தபட்சம் 54 எம்பிக்கள் தேவை.

இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியாவின் பெயரை மல்லிகார்ஜூன கார்கே முன்மொழிந்தார்.
அதைத் தொடர்ந்து கித்வாய் உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிந்தனர். பின்னர் சோனியா ஒருமனதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது பேசிய சோனியா, மக்கள் நலனுக்காக புதிய அரசுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும். அரசுடன் இணைந்து செயல்பட்டாலும் மக்கள் பிரச்சனைகளை எழுப்புவோம். காங்கிரஸ் கட்சி ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றார்.












Click it and Unblock the Notifications