மீண்டும் சர்ச்சையில் அஜித்பவார்! பலாத்காரத்தில் ஈடுபடுவோரின் 'அதை' அறுக்க வேண்டும் என பேச்சு!!
Subscribe to Oneindia Tamil

மும்பை ஜல்னாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியின் கூட்டத்தில் மாநில துணை முதல்வர் அஜித்பவார் நேற்று கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பாலியல் குற்றங்களை தடுக்க நிரந்தர தீர்வு வேண்டுமானால் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். எனவே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் பால் உறுப்பை துண்டிக்க வேண்டும் என்று கூறினார்.
அஜித்பவார் ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் புனேயில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது மகாராஷ்டிராவிலுள்ள அணைகளில், தண்ணீர் இல்லை எனில், சிறு நீர் மூலமா அதை நிரப்ப முடியும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரம் விஸ்வரூபமானதால் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications