ஹூட் ஹூட் புயலை எதிர்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்
டெல்லி: ஒடிஷா மற்றும் ஆந்திராவை தாக்க இருக்கும் ஹூட் ஹூட் புயலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம் நடைபெற உள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஹூட் ஹூட் புயல் நாளை ஒடிஷா மற்றும் ஆந்திரா இடையே கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஹூட் ஹூட் புயலை எதிர்கொள்ள இருமாநிலங்களிலும் தாயார்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று அவசர உயர்மட்ட கூட்டம் நடக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹூட் ஹூட் புயல் கரையை கடக்கும் போது மிகவும் பலத்த மழையும் இடியுடன் கூடிய பலத்த காற்று வீசகூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹூட் ஹூட் புயல் தற்போது வங்ககடலில் 330 கி.மீ இருந்து 380 கீ.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் கூறினர்.
நாளை பிற்பகல் இருந்தே ஹூட் ஹூட் புயல் அதிதீவிரமாக கரையை தாக்க கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயல் சேதத்தை தடுக்க 250 ராணுவ அதிகாரிகள் மற்றும் 4 கடற்படை கப்பல்கள் மற்றும் 10 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளன. ஹூட் ஹூட் புயலால் கடற்கரையொட்டி செல்லும் 38 ரெயிகள் மாற்று வழியில் செல்ல கேட்டுகொள்ளபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications