ஓகி புயலால் தமிழகத்தில் 10 பேர்; கேரளாவில் 29 பேர் பலி: 74 மீனவர்களை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
தமிழகம், கேரளாவில் ஓகி புயலுக்கு சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஓகி புயலால் தமிழக மீனவர்கள் 10 பேரும் கேரளாவில் 29 பேரும் பலியாகி உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓகி புயல் பாதிப்பு தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

- ஓகி புயலால் மொத்தம் 39 பேர் பலியாகி உள்ளனர்.
- தமிழகத்தில் 10 பேரும் கேரளாவில் 29 பேரும் ஓகி புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
- தமிழகத்தைச் சேர்ந்த 74 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 93 மீனவர்களை காணவில்லை.
- தமிழகத்தில் 220, கேரளாவில் 309, லட்சத்தீவில் 27 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
- லட்சத்தீவில் சிக்கிய 33 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications