'ஓகி' புயலால் இவ்வளவு சேதங்கள் ஏற்படலாம்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு #Ockhi
டெல்லி: 'ஓகி' புயலால் தென் தமிழகத்தில் சேதங்கள் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கன்னியாகுமரியையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம், புயல் சின்னமாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது.
அதேபோல காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக உருவாகிவருகிறது. அதற்கு 'ஓகி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

தெற்கே கன மழை
இந்த புயலானது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லும். இதன் தாக்கத்தால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

சேதம் எச்சரிக்கை
இந்த நிலையில், சேதங்கள் குறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வீடுகள், பயிர்களுக்கு காற்றால் சேதம் ஏற்படலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கூரை வீடுகள் அதிகம் பாதிப்புள்ளாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேரள மாவட்டங்கள்
பத்தினம்திட்டா, ஆழப்புழா, கோட்டையம், இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய கேரளாவிலுள்ள மாவட்டங்களிலும் மழை மற்றும் காற்றால் பாதிப்பு நேரிடலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மின்சார இணைப்பு
தமிழகம் மற்றும் கேரள தென் மாவட்டங்களில் ஓகி புயல் காரணமாக மின்சார துண்டிப்பு, செல்போன் இணைப்பு துண்டிப்பு ஆகியவை ஏற்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் தென் மாவட்ட மீனவர்களும், 48 மணி நேரத்திற்கு கேரள தென் மாவட்ட மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications