சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி கட்டத்தை எட்டியது.
இந்நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார். ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றும் புதிய நீதிபதியை நியமிக்கக் கூடாது என்றும் ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே பொறுப்பு நீதிபதியாக முடி கவுடரும் பின்னர் விசாரணை நீதிபதியும் நியமிக்கப்பட்டனர். இதற்கு ஜெயலலிதா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் எந்த அடிப்படையில் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டார் என்ற விவரத்தை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கர்நாடக அரசு, நீதிபதி பாலகிருஷ்ணா பணியில் தொடர விரும்பவில்லை என்று கூறிவிட்டதாகவும்உரிய விதிகளின்படியே புதிய நீதிபதி நியமிக்கப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தது. கர்நாடக அரசின் இப்பதில் மனு மீது 2 வாரத்துக்குள் பதில் தாக்கல் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications