குளிரால் முடங்கிக் கிடக்கும் காஷ்மீர்- உறைந்து போன வரலாற்றுச் சிறப்பு மிக்க தால் ஏரி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவு காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க தால் ஏரி உறைந்து போய் காணப்படுகின்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில நாட்களாக கடுமையான பனி பொழிந்து வருகின்றது. இன்னும் 40 நாட்களுக்கு பனி நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் ஸ்ரீநகரில் இன்று பெய்துவரும் பனியின் அளவு மைனஸ் 5.6 டிகிரியாக உள்ளது. லடாக் பகுதியில் மைனஸ் 15.1 டிகிரியாக நிலவுகின்றது.

இதனால், வரலாற்று சிறப்புமிக்க தால் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் உறைந்துப்போய் ஐஸ்கட்டிகளாக காட்சி அளிக்கின்றது. இன்னும் 72 மணிநேரத்துக்கு அதிகமான பனிப்பொழிவு நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடும்குளிரில் வெளியே செல்ல முடியாமல் வீட்டினுள் மக்கள் முடங்கிக் கிடக்க நேரிட்டுள்ளது.
காஷ்மீரின் மிகப்பிரபலமான தால் ஏரியை சுற்றியுள்ள சாலைகளும் நேற்றும், இன்றும் வெறிச்சோடிக் காணப்பட்டன. காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் மைனஸ் 3.3 டிகிரி செல்சியஸாகவும், அமர்நாத் யாத்திரையின் பேஸ் கேம்ப் பகுதியில் மைனஸ் 7.9 டிகிரி செல்சியஸாகவும் குளிர் நிலை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications