தலித்துகள் மீதான தாக்குதல் எதிரொலி... தலித் எம்பிக்களுடன் பாஜக முக்கிய தலைவர்கள் ஆலோசனை
காந்திநகர்: தலித் மக்களின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து மக்களவையில் விவாதம் ஏற்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக பாஜக மூத்த தலைவகள் அக்கட்சியில் உள்ள தலித் எம்பிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சமீபகாலமாக பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது தொடர்பாக எஸ்சி மோர்ச்சாவில் இருந்து வரும் தகவல் தெரிவிப்பதாவது: கடந்த செவ்வாய் கிழமை மாலை பாஜக முக்கிய தலைவர்கள் தலித் எம்பிக்களுடன் குஜராத் பவனில் கலந்து ஆலோசனை நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் ராம் சங்கர் காத்ரினா, அமைப்பின் பொதுச்செயலாளர் ராம்லால், புபேந்திர யாதவ் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்சி மோச்சாவின் தலைவர் கவுதம் துஷ்யந்த் பாஜக எம்பிகள் தலித் மக்களை சந்தித்து மத்திய அரசு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அரசானது தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கானது என்பதை தெரிவிக்க வேண்டும். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நலிவடைந்த மக்களுக்கானது என்பதை எம்பிக்கள் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதிக தலித் எம்பிக்களை கொண்ட கட்சியாக பாஜக உள்ள நிலையில், அந்த மக்களிடம் இருந்து பாஜவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்று கூறினார்.
பல்வேறு மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எதிர்கட்சிகள் பசு பாதுகாப்பு அமைப்புகள், சங் பரிவார் மீதும் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன.
இதனிடையே சமீபத்தில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சொந்த சகோதர, சகோதரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சமம் என்றார். மேலும், பல நூற்றாண்டுகளாக இன்னல்களை அனுபவித்த தலித் மக்களை மேலும் சித்ரவதைக்குள்ளாக்க வேண்டாம். தலித் மக்கள் மீது அன்பு காட்டாதவர்களை உலகம் ஒருபோதும் மன்னிக்காது. தாக்குதல் நடத்துபவர்களும், துப்பாக்கியால் சுடுபவர்களும் தம்மை வேண்டுமானால் குறிவைக்கட்டும் தலித்துக்கள் மீது அவர்கள் நடத்த வேண்டாம் என பிரதமர் மோடி ஆவேசமாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications